அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு சலுகைகளை கூறி அழைப்பு விடுத்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பு முடித்தவுடன் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து மருத்துவம் அல்லது பொறியியல் பட்டதாரியாகவே விரும்புகின்றனர். ஒரு சில ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்கள் தான் தொழிற்கல்வி படிக்கின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 4ம், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் 20ம், அரசு உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்கள் 2ம் உள்ளன. இவற்றில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் 4 ஐ.டி.ஐ.,யில் பல்வேறு டிரேடுகளில் 1100 இடங்களும், தனியார் ஐ.டி.ஐ.,களில் 1400 இடங்களும் உள்ளன.
இந்த ஆண்டு இதுவரை 3,950 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்த அளவிற்கு விண்ணப்பங்கள் வராததால் விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய நாளை (30ம் தேதி) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களை கவர்ந்திழுக்க அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஐ.டி.ஐ., நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு மாதா மாதம் உதவித்தொகை 500 ரூபாய், பஸ் கட்டண சலுகை, இலவச சைக்கிள், லேப்டாப், பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 2 ஜோடி சீருடைகள், அவற்றை தைப்பதற்கான கூலித்தொகை, ஷூ உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை கடந்தாண்டை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை