கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற்ற மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு வெளியான, 10 நாட்களுக்குள் கல்லுாரிகளில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, மே, 17ம் தேதி முதல், 10 நாட்கள் என்ற கணக்கில், மே, 27ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் விண்ணப்பம் வாங்கவே, காத்திருக்கும் சூழல் உள்ளது. பல மாவட்ட பள்ளிகளில், பிளஸ் 2 தற்காலிகமதிப்பெண் சான்றிதழ் மட்டுமே, வழங்கப்பட்டுள்ளது. கல்லுாரி படிப்பில் சேர தேவையான மாற்று சான்றிதழ் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்னும் வழங்கப்படவில்லை.
எனவே, அண்ணா பல்கலையில் விண்ணப்ப தேதியை நீட்டித்தது போல, கலை, அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை