பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாணவர்கள் பெறும், 'சென்டம்' எண்ணிக்கை தான், ஒவ்வொரு ஆண்டும், கல்லுாரிகளில் இடம் கிடைப்பதில் பலத்த போட்டியைஏற்படுத்துகிறது. இந்தாண்டு பிளஸ் 2வில், கணிதம், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில், கடந்த ஆண்டை விட, 'சென்டம்' எடுத்தவர்கள் எண்ணிக்கை, பலமடங்கு குறைந்துள்ளது.
அதே நேரம், வணிக கணிதம், 'அக்கவுன்டன்சி' எனப்படும் கணித பதிவியல் மற்றும் வணிகவியலில் அதிகம் பேர், 'சென்டம்' எடுத்துள்ளதால், கலை கல்லுாரிகளில், வணிகவியல் சார்ந்த பாடங்களுக்கு அதிக போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல், பி.காம்., மற்றும் கார்பரேட் செக்ரட்ரிஷிப் படிப்புகளுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் கவனம் வணிகவியல் சார்ந்த படிப்புகளுக்கு திரும்பியுள்ளது. இதேபோல், சில கல்லுாரிகளில் இயற்பியல், ஆங்கிலம் போன்ற படிப்புகளுக்கும் அதிக போட்டி ஏற்பட்டுள்ளது.கல்லுாரிகளில் கூட்டம் அலை மோதுவதால், விண்ணப்பம் வாங்க, மாணவ, மாணவியர் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதனால், அனைத்து கலை கல்லுாரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை