தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்து அவர்களுக்கான பணி உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன. மேற்படி உத்தரவுகளை வாங்க மறுத்தாலோ அல்லது பெற்றுக்கொண்டு ஏப்.24-ம் தேதி நடைபெறவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தாலோ தேர்தல் விதிகளின் படியும் துறைவாரியாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பணி உத்தரவுகளை பெற்றுக்கொண்டவர்கள் பல்வேறு காரணங்களினால் மருத்துவச்சான்றுகளை பெற்றுக்கொண்டு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க கோரி பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களது மருத்துவ சான்றுகளை மருத்துவ குழுவுக்கு அனுப்பி உண்மை தன்மை குறித்து நன்கு ஆய்வு செய்த பின்னரே விலக்க அளிக்க பரிசீலனை செய்யப்படும் எனவும் தவறான சான்றிதழ்கள் ஏதும் கொடுக்கப்பட்டிருப்பின் அவர்கள் மீது தேர்தல் விதிகளின் படியும் துறை ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை