மதிய உணவு திட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு,மாவட்ட அளவில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காணிப்பு பணியில் ஈடுபட, மாவட்டத்தில் ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் அடங்கிய, இருவர் குழுவை தேர்வு செய்து விபரங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சத்துணவு திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், 46 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இம்மாணவர்களுக்கு, தினந்தோறும் கலவை உணவு, உணவுடன் முட்டை, நான்கு செட் சீருடை வழங்கப்படுகின்றன. பிற நலத்திட்டங்களை காட்டிலும், சத்துணவு திட்ட செயல்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாணவர்கள் எண்ணிக்கை முறையாக கொடுக்காமல் அதிகரித்து கொடுத்து, நிதி முறைகேடு நடப்பதாகவும், ஒரு சில இடங்களில் தவறுதலாக மாணவர்கள் எண்ணிக்கை கொடுப்பதால் உணவு வீணடிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மாவட்ட அளவில் ஊராட்சி, ஒன்றிய, அரசு, அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க, ஒரு தலைமையாசிரியர், ஒரு இடைநிலை பட்டதாரி ஆசிரியரை தேர்வு செய்து அப்பட்டியலை அனுப்பும் படி மாவட்டதொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை