Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்'ஒழுங்கு நடவடிக்கையும் பாய்கிறது : SR - ல் பதிவு செய்ய உத்தரவு

பிப்., 10 முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டு, வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளத்தை பிடிக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர் சங்கங்களுடன் சேர்ந்து, சில ஆசிரியர் சங்கங்களும், சில கல்வி அலுவலக ஊழியர் சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 


இதையடுத்து, வேலைக்கு வராமல், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்கள், ஆசிரியர்களிடம், எந்த விளக்கமும் கேட்காமல் சம்பளத்தை பிடிக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


ஆசிரியர்களின் பணி புத்தகத்திலும் அவர்கள், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட தகவலை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கில் பங்கேற்றவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பதவி உயர்வு மற்றும் பணப்பலன் சலுகைகளை ரத்து செய்வது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement