'நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தினமும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா கூடுதல் ஆணையர் யு.என்.காவரே, மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
இந்திய தேசியக் கொடி, கவுரவம் மற்றும் சுதந்திரத்தின் சின்னமாக விளங்குகிறது. அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். தேசியக் கொடியை பற்றி, அனைத்து தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தினமும் காலை தேசியக் கொடி ஏற்ற வேண்டும்; சூரிய அஸ்தமனத்துக்கு முன், கொடியை இறக்க வேண்டும். பள்ளி முதல்வர்கள், பள்ளியின் முக்கியமான பகுதியில், கொடிக் கம்பத்தை நிறுவ வேண்டும். காலையில் மாணவர்கள் கூடி, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை