ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இனிமேல், நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றும், மாறாக, தேர்வாணையத்தின் இணைய தளத்தில், 'இ - சம்மனை' டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இதுவரை, கடிதம் மூலம், நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி, இணைய தளம் மூலம், அழைப்புக் கடிதம் அனுப்ப, யு.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.நடப்பு ஆண்டுக்கான நேர்முகத்தேர்வு, மார்ச், 8ம் தேதி முதல் துவங்க உள்ளது.
என்ன செய்ய வேண்டும்?:நேர்முகத்தேர்வுக்கு இனிமேல், அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது. மாறாக, தேர்வர்கள், மின்னணு முறையிலான அழைப்பாணையை, தேர்வாணையத்தின், www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து, 'டவுண்லோடு' செய்ய வேண்டும்.
அழைப்புக் கடிதத்தை, 'டவுண்லோடு' செய்ய முடியாவிட்டால், அதுபற்றி, உடனடியாகவோ அல்லது நேர்முகத் தேர்வுக்கு, ஐந்து நாட்களுக்கு முன்போ, தேர்வாணையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென, யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை