தேசிய அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியராக, கோத்தகிரி தேனாடு ஊராட்சிபள்ளி ஆசிரியர்தர்மராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு நிறுவனம் (ஐ.சி.டி.ஏ.சி.டி.,), தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, எல்காட் நிறுவனம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர், கல்லூரி பேராசிரியர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான இணைய வழி போட்டிகள், கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி கடந்த 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. 2297 பேர் பங்கேற்றனர். தகுதி அடிப்படை யில், இறுதி சுற்றுக்கு 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர் களுக்கான இறுதி கட்ட போட்டிகள், சென்னை எல்காட் நிறுவனத்தில் நடைபெற்றது. ஐ.சி.டி.ஏ.சி.டி., நிறுவனத்தின்சிறப்பு நடுவர்கள் படைப்புகளை ஆய்வு செய்தனர்.அதில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த தேனாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் தர்மராஜ் முதலிடம் பிடித்து, தேசிய அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை செய லாளர் ராமச்சந்திரன், ஐ.சி.டி. கூட்டமைப்புத் தலைவர் லட்சுமி நாராயணன் ஆகியோர் ஆசிரியர் தர்மராஜுக்கு விருது வழங்கி கவுரவித்தனர். ஆஸ்திரேலியா அரசின் தெற்காசிய துணைச் செயலாளர் ஜான் பொன்னார், ஆட்டோடெஸ்க் அமைப்பின் நிர்வாகி மிக்கி மேக்மேனஸ், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஹெட்ச் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதுகுறித்து ஆசிரியர் தர்மராஜ் கூறும்போது, “6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள கடினமான பாடப் பகுதிகளை, முழுமையாக வீடியோ மற்றும் அனிமேஷன் பாடத் தொகுப்புகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்” என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை