ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, 15 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, அரசு பள்ளி இடைநிலை உதவியாளரை, 'சஸ்பெண்ட்' செய்து, தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, இளநிலை உதவியாளர் கண்ணன் என்பவர், முறைகேடாக ஊதியம் பெற்று வருகிறார் என்று, தி.மலை முதன்மைக் கல்வி அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக, கடந்த 4ம் தேதி, அந்த பள்ளியில் ஆய்வு நடத்திய போது, இளநிலை உதவியாளர் கண்ணன் தன் ஊதியத்துடன், ஒவ்வொரு மாதமும், 5,000 ரூபாய் வரை, ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, கூடுதலாக பெற்றுவந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தசாமி தலைமையில், உரிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணையில், 2011ல் இருந்து கடந்த ஜனவரி மாதம் வரை முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படியாக, ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, 15 லட்சம் ரூபாய் மோசடிசெய்தது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணை அறிக்கை அடிப்படையில், இளநிலை உதவியாளர் கண்ணனை சஸ்பெண்ட் செய்து, முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை