பழைய ஓய்வூதியத்தை செயல்புடுத்த புதிய வல்லுனர் குழு.
கிராம செவிலியர்க்கு துறை செவிலியராக பதவிவுயர்வு.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பலம்15000
மருத்துவக்கலூரி பேராசிரியர்களுக்கு பதவியுயர்வு.
பதவி உயர்வு பெற்றுள்ள பதவி உயர்வு பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு கணக்கு தேர்வில் விளக்கு.
அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர்கள் 157 பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு
அரசு அலுவலர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மீண்டும் நிர்வாக தீர்ப்பாயம் ஏற்படுத்தப்படும்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்று பணி வரன்முறை முடித்தவர்களுக்கு ஊதிய உயர்வு.
அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் அறிவிப்புக்களை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா,அரச ஊழியர்கள் நலனில் எப்போதும் தமிழகஅரசுக்கு அக்கறை இருப்பதாக தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் குடும்ப நல உதவி 1.50 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்த முதல்வர், இதன் காரணமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ 20 கோடி செலவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதியம் 1000 ரூபாயில் இருந்து 1 500 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும்,இதன் மூலம் 86 813 சத்துணவு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் எனவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் 10,000 ரூபாயில் இருந்து 15,000ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். இது இவ்வாறு இருக்க கடந்த 10 நாட்களாக 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,முதல்வரின் இந்த அறிவிப்பு மிக முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை