பட்டாசு ஆலையில் ஏற்படும் வெடி விபத்தை தடுக்கவும், அங்கு பணிபுரியும் தொழிலாளியை பாதுகாக்கவும் தானியங்கி தீயணைப்பான் மாதிரி வடிவமைப்பை ஜமீன் சல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவன் ஜெயக்குமார் கண்டுபிடித்துள்ளார்.
மாணவன் கூறுகையில் “இதை ஆலையில் செயலாக்கம் செய்தால் வெடி விபத்தை முழுமையாக தடுக்க முடியும். இதற்கு வெப்ப சென்சார் கருவி, எக் சாஸ்ட் பேன், அலாரம், இரண்டு நீர் தேக்க தொட்டிகள், சிறிய பேட்டரிகள் இருந்தால் போதும்.அறையில் வெடி, தீ விபத்து ஏற்படும் போது அதை வெப்ப சென்சார் உணர்ந்து உடனடியாக அலாரத்திற்கு தகவல் கொடுக்கும்.
அந்நேரத்திலேயே பேட்டரி உதவியுடன் பட்டாசு தயாரிப்பு அறையில் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வேகமாக பைப் மூலம் கடந்து அறை முழுவதும் தெளித்து தீயை கட்டுப்படுத்தும். புகை எக்சாஸ்ட் பேன் மூலம் வெளியேற்றப்படுகிறது. இவை அனைத்தும் தானியங்கி மூலம் நடக்கும். இதன் மூலம் பட்டாசு ஆலையில் ஏற்படும் விபத்தை தடுக்க முடியம்.எனது தாய் பட்டாசு ஆலையில் வேலை செய்கிறார். அவர் படும் கஷ்டத்தை மனத்தில் வைத்து இந்த வடிவமைப்பை உருவாக்கினேன்,” என்றார்.
மாணவன் ஜெயக்குமார் மாநில அளவில் நடந்த பல்வேறு அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்று பல பரிசுகள் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மாணவனை பாராட்ட 97879 64984 ல் அழைக்கலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை