Ad Code

Responsive Advertisement

சிறப்பு ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் பட்டத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் சிறப்பு பட்டயம் பயின்றவர்கள் தங்களது சான்றிதழ் சரிபார்ப்பை புதன்கிழமை (அக்.28) செய்துகொள்ள வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி வெளியிட்ட அறிக்கை:

 மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகம், துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு பயிற்சியில் பட்டயம் முடித்தவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

 இவற்றை முடித்து காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் நேரில் சென்று தங்கள் கல்விச் சான்றை சரிபார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement