Ad Code

Responsive Advertisement

பள்ளி சான்றிதழில் ‘பகீர்’ மோசடி : போக்குவரத்து கழக ஊழியர் 13 பேர் அதிரடி பணிநீக்கம்

போக்குவரத்துக்கு கழகங்களில் வேலைக்கு சேர்பவர்கள் பணி நியமனத்தின்போது தரும் பள்ளி சான்றிதழ், சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்பப்பட்டு உண்மை நிலை அறியப்படும். காரைக்குடியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 1991ம் ஆண்டு முதல் 2002 வரையிலான ஆய்வில் 15 பேர், 8ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்தது. 

ஆனால் தேர்ச்சி பெற்றதாக, தங்களது மாற்றுச்சான்றிதழை திருத்தி, பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 2 பேர் இறந்து விட்டனர். அவர்கள் பணியில் சேர்ந்த 2 மாதங்களிலேயே இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர்கள் 13 பேரையும் டிஸ்மிஸ் செய்து போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement