Ad Code

Responsive Advertisement

விருதுநகர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருடன் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - யினர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

விருதுநகர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக புதிதாக  பதிவியேற்ற திரு.முருகேசன் அவர்களை 23/09/2015 அன்று "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - யினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

மாநிலப்  பொருளாளர் திரு.லட்சுமணன் அவர்களின் தலைமையில் மாநில துணைச் செயலாளர் திரு.செல்வ பூபதி,  விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு.அன்புசெல்வன், மாவட்டச் செயலாளர் திரு.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.சுப்புராஜ் உள்ளிட்ட விருதுநகர் மாவட்ட பேரவை நிர்வாகிகள் சந்திப்பின் போது உடனிருந்தனர். 


தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களுக்கு வாழ்த்துகளையும், பேரவையின் முழு ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என பேரவையின்    மாநிலப்  பொருளாளர் திரு.லட்சுமணன் அவர்கள் உறுதி அளித்தார். தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் பணி விருதுநகர் மாவட்டத்தில் சிறக்கவும் பேரவையின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது   

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement