விருதுநகர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக புதிதாக பதிவியேற்ற திரு.முருகேசன் அவர்களை 23/09/2015 அன்று "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - யினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
மாநிலப் பொருளாளர் திரு.லட்சுமணன் அவர்களின் தலைமையில் மாநில துணைச் செயலாளர் திரு.செல்வ பூபதி, விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு.அன்புசெல்வன், மாவட்டச் செயலாளர் திரு.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.சுப்புராஜ் உள்ளிட்ட விருதுநகர் மாவட்ட பேரவை நிர்வாகிகள் சந்திப்பின் போது உடனிருந்தனர்.
தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களுக்கு வாழ்த்துகளையும், பேரவையின் முழு ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என பேரவையின் மாநிலப் பொருளாளர் திரு.லட்சுமணன் அவர்கள் உறுதி அளித்தார். தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் பணி விருதுநகர் மாவட்டத்தில் சிறக்கவும் பேரவையின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை