தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, இயற்கை கிருமிநாசினி தயாரித்து, அரசு பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.ஆமதாபாத், 'டிசைன் பார் சேஞ்ச்' அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான, 'புராஜக்ட் எக்ஸ்போ' போட்டி நடத்தப்படும். இந்தாண்டு தேசிய அளவில் நடக்கும் இப்போட்டியில், கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக, பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள், நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோர், இயற்கை கிருமிநாசினியை கண்டுபிடித்துள்ளனர்.
புதிதாக கண்டுபிடித்துள்ள இயற்கை கிருமிநாசினி குறித்து மாணவர்கள் கூறியதாவது: அன்றாடம் பயன்படுத் தும், 'சோப்', 'ஷாம்பூ' உள்ளிட்ட கிருமிநாசினிஅனைத்தும் ரசாயனங்களால் செய்யப்பட்டவை. இவற்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு தோல் நோய்களும் வருகின்றன. இவற்றை கணக்கில்கொண்டு இயற்கை முறையில், கிருமி நாசினி தயாரித்துள்ளோம். செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, திருநீற்றுப்பத்து, கற்பூரவள்ளி ஆகியவற்றை கலவையாக்கி, இயற்கை கிருமி நாசினி தயாரித்துள்ளோம். இவை அதிக நாள் மக்கள் பயன்படுத்த வசதியாக, எலுமிச்சையை சேர்த்துள்ளோம்.
இயற்கை கிருமி நாசினியால் கையும் சுத்தமா கும்; உடலுக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது. இவை எங்கள் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயன்படுத்த, நாங்களே தயாரித்து கொடுத்துள்ளோம். இந்த கண்டுபிடிப்புக்கு பள்ளி யின் கணித ஆசிரியர், சத்யபிரபா தேவி உதவினார்.இவ்வாறு, மாணவர்கள் கூறினர்.
'பாக்கெட்' உணவுக்கு 'குட் பை':
ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஸ்ருதி, சந்தியா மற்றும் மவுலியா இணைந்து, பாக்கெட் உணவுகளை சாப்பிடுவ தால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மாணவி ஸ்ருதி கூறுகையில், ''பாக்கெட் உணவால், உடலுக்கு பல்வேறு கெடுதல்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பாக்கெட் உணவுக்கு செலவிடும் பணத்தில், புத்தகங்கள் வாங்கித்தர பெற்றோருக்கு அறிவுறுத்தி வருகிறோம்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை