பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உட்பட, பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டதாக, 'வாட்ஸ் ஆப்'பில் நேற்று பரவிய வதந்தியால், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை உறுதிபடுத்தாமல், சில, 'டிவி' சேனல்கள் மற்றும் இணையதளங்களும் இச்செய்தியை ஒளிபரப்பின.
ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ, அரசுத் துறைக்கோ, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றம் செய்யும் பொதுத்துறைக்கோ, இதுகுறித்த எந்த தகவலும் தெரியவில்லை.
பட்டியல்
அதனால், தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தொடர்ந்து குழப்பத்தில் இருந்தனர். காலை, 11:00 மணி முதல் பிற்பகல், 3:00 மணி வரை, போனில் விசாரித்த வண்ணம் இருந்தனர். 'மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பட்டியல்' என்ற தகவலும், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது. இதைப் பார்த்த பிறகே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் என்பது வதந்தி என்பது உறுதியானது.
ஏனென்றால், அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த சில அதிகாரிகள், பல மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர்கள்; ஒரு அதிகாரி, சில மாதங்களுக்கு முன் விபத்தில் காலமாகிவிட்டார். இந்த வதந்தியால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 2012 பட்டியலை, யாரோ ஒருவர் தவறாக மூன்று ஆண்டுகளுக்கு பின் வெளியிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை முதலில் வெளியிட்ட அந்த நபர் யார் என, அரசு தரப்பில் விசாரணை துவங்கிஉள்ளது.
ஹெல்மெட் இதேபோன்ற ஒரு வதந்தி, நேற்று முன்தினம் மாலையிலும், 'வாட்ஸ் ஆப்' மூலம் பரவியது. பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் கைது செய்யப்பட்டார்; நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,செந்தில்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார் என்று வதந்திகள் பரவின. அதுமட்டுமின்றி, 'ஹெல்மெட்' அணிவதிலிருந்து பெண்களுக்கு விலக்களிக்க முதல்வர் உத்தரவு; 'டாஸ்மாக்' கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு என்றும், தவறான தகவல்கள், 'வாட்ஸ் ஆப்'பில் வலம் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை