12.15 மணிக்கு அப்துல் கலாமின் உடல் நல்லடக்கப் பணிகள் முடிந்தன. இதை யடுத்து உடல் அடக்கம் செய் யப்பட்ட இடத்தில் நிறைய மலர்கள் தூவினார்கள். அப் போது இஸ்லாமிய முறைப் படி அப்துல்கலாமின் உறவி னர்கள் பிரார்த்தனை செய் தனர்.
அதன் பிறகு அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதியை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல் அடக்கம் நடைபெற்ற இடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு இருந்தது. அவர்களை கட்டுப்படுத்த போலீசாரும் அதிரடிப்படையினரும் மிகவும் சிரமப்பட்டனர்.
பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய போது மக்கள் முண்டியடித்தால் தடுப்பு வேலிகள் உடைந்தன. அதை தாண்டி உள்ளே நுழைய முயன்றவர்களை போலீசார் விரட்டினர். உடல் அடக்கம் முடிந்து தலைவர்கள் கிளம்பியதும் அனைத்து பக்கங்களில் இருந்தும் கூட்டத்தினர் முண்டியடித்து உள்ளே சென்றனர். கட்டுப்படுத்த முடியாததால் போலீசாரும் விட்டு விட்டனர்.
கலாம் உடலை பார்க்க முடியாமல் இருந்தவர்கள் உடல் அடக்கம் நடந்த இடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பலர் தொட்டு வணங்கி சென்றார்கள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை