பி.இ., - பி.டெக்., படிப்புக்கான தொழிற்கல்வி கவுன்சிலிங், ௩௦ம் தேதி நடக்கும் என, அண்ணா பல்கலை அறிவித்து இருந்தது.இன்ஜி., பொது கவுன்சிலிங் நேற்று முன்தினம் முடிந்தது. இதைத் தொடர்ந்து, 3,000 மாணவர்களுக்கான தொழிற்கல்வி கவுன்சிலிங் நேற்று துவங்கியது.
முதல் நாளில், 1,128 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 161 பேர் வரவில்லை. 17 பேர் விருப்பப் பாடம் கிடைக்காததால், இடங்களை திருப்பி அளித்தனர். 950 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இரண்டாம் நாள் கவுன்சிலிங், ௩௦ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு இன்று நடப்பதையொட்டி, தொழிற்கல்வி கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கவுன்சிலிங் நாளை நடக்கும் என்று, அண்ணா
பல்கலை அறிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை