Ad Code

Responsive Advertisement

சென்னை அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் ரத்து

பி.இ., - பி.டெக்., படிப்புக்கான தொழிற்கல்வி கவுன்சிலிங், ௩௦ம் தேதி நடக்கும் என, அண்ணா பல்கலை அறிவித்து இருந்தது.இன்ஜி., பொது கவுன்சிலிங் நேற்று முன்தினம் முடிந்தது. இதைத் தொடர்ந்து, 3,000 மாணவர்களுக்கான தொழிற்கல்வி கவுன்சிலிங் நேற்று துவங்கியது.
முதல் நாளில், 1,128 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 161 பேர் வரவில்லை. 17 பேர் விருப்பப் பாடம் கிடைக்காததால், இடங்களை திருப்பி அளித்தனர். 950 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இரண்டாம் நாள் கவுன்சிலிங், ௩௦ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு இன்று நடப்பதையொட்டி, தொழிற்கல்வி கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கவுன்சிலிங் நாளை நடக்கும் என்று, அண்ணா
பல்கலை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement