தமிழக அரசு ஊழியர்களின் 2014-2015 நிதி ஆண்டுக்கான பொது வருங்கால வைப்புநிதி (ஜி.பி.எஃப்.) ஆண்டு கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயரின் நிர்வாக வலைதளத்தில் ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. சந்தாதாரர்கள் பொது வருங்கால வைப்பு நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே இந்த வலைதளத்தில் இருந்து தங்களது 2014-2015-ஆம் ஆண்டு கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சந்தாதாரர்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை இந்த வலைதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த ஆண்டில் இருந்து, ஆண்டு கணக்கு அறிக்கை சீட்டு அலுவலகத்திலிருந்து விநியோகிக்கப்பட மாட்டாது. சந்தாதாரர்களின் கணக்கு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தாலோ அல்லது விடுபட்ட சந்தா தொகை அல்லது விடுபட்ட கடன் தொகை ஆகியவற்றுக்கு விவரங்கள் இருப்பின் தங்களது அலுவலகத்தின் மூலம் கீழ்க்கண்ட தகவல் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, மாநில கணக்காயர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள் விவரம்: துணை மாநில கணக்காயர், தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலுவலகம் (கணக்கு, பணி வரவு), 361, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை, 600018 என்ற முகவரியிலும், 044-24314477, 24342812 என்ற தொலைபேசி எண்களிலும், www.agae.tn.nic.in என்ற வலைதளத்திலும், aggpf@tn.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை