இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள, சென்னையைச் சேர்ந்த, பார்வையற்ற பெண் பெனோ ஜெபின், விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, வாழ்த்து பெற உள்ளார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 'டுவிட்டர்' இணையதளத்தில், பெனோஜெபின் குறித்து கூறும்போது, 'கனவுகளுக்கு தடை எதுவும் இல்லை' என, குறிப்பிட்டுள்ளார். இன்று அகில உலகத்தையும், தன் பக்கம் ஈர்த்துள்ள, பெனோ ஜெபின், சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை அந்தோணி சார்லஸ். ரயில்வே ஊழியராக உள்ளார். தாய் பத்மஜா. இவர்கள் மகளின் வளர்ச்சிக்கு, பெரிதும் உதவியாக இருந்துள்ளனர்.
கல்லுாரி படிப்பை முடித்த பின், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்தபடி, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாரானார்.பாடங்களை, 'பிரெய்லி' முறையில் படித்து, தேர்வு எழுதினார். முதல் முயற்சியில், தோல்வியை தழுவினார். இரண்டாவது முயற்சியில், தேசிய அளவில், 343வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார். தற்போது, வெளியுறவுத் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை