Ad Code

Responsive Advertisement

ஜூலை மாத இறுதியில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, CRC சிறப்பு CL கொடுக்கப்படாத ஒன்றியங்களில் உடனடியாக கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" நிர்வாகிகளிடம் இயக்குனர் உறுதி.

இன்று 19/06/2015 காலை "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" பொதுச்செயலாளர் திரு செ. ஜார்ஜ் அவர்கள் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் அவர்களை நேரில் சந்தித்தனர். 

சந்திப்பின்போது இயக்குனரிடம் பொது மாறுதல் கலந்தாய்வு,  CRC சிறப்பு CL பல்வேறு ஒன்றியங்களில் அளிக்க மறுப்பது உட்பட  பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. கோரிக்கைகளை கேட்டறிந்த இயக்குனர்    ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை மாத இறுதியில் நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

CRC சிறப்பு CL அனைத்து ஒன்றியகளிலும் அளிக்கப்படவேண்டும். அளிக்கப்படாத ஒன்றியங்கள் பற்றி தெரிவித்தால் சிறப்பு CL அளிக்க சம்பத்தப்பட்ட AEEO களுக்கு அறிவுரதப்டும் என தெரிவித்தார்.


சந்திப்பின் போது   "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" மாநில  பொதுச்செயலாளர் திரு செ. ஜார்ஜ், மாநிலத் துணைத்தலைவர் திரு.லக்ஷ்மணன், விருதுநகர் மாவட்ட செயலாளர் திரு. கனகராஜ், மாவட்ட பொருளாளர் திரு.அழகர்சாமி, சிவகாசி மாவட்ட செயலாளர் திரு. ஸ்ரீநிவாசன், திரு.தன்னாசி, தூத்துக்குடி     மாவட்ட செயலாளர் திரு. ஸ்ரீநிவாசன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் இருந்தனர்.   

    

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement