தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிய நியமிக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுக்கள் சனிக்கிழமை முதல் ஆய்வு மேற்கொள்கின்றன.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கவும், சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை பள்ளிகள் வெளியிடவும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாய்ப்பு மறுக்கப்படும் பெற்றோருக்கு அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும். அத்துடன் தகுதியுடையவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேலூர் மாவட்டத்துக்கு 37 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் சனிக்கிழமை முதல் தங்கள் ஆய்வை தொடங்கவுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை