Ad Code

Responsive Advertisement

அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் இருந்து மத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் 1 -ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் 60 மாணவர்கள் புதியதாகச்சேர்ந்துள்ளனர்.

இதேபோல், மத்தூர் ஒன்றியத்தில் உள்ள 98 அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் 2015-16-ம் கல்வியாண்டில் 300-க்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மத்தூர் அரசு தொடக்கப்பள்ளி 1- ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை 230 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது.

இப் பள்ளியில் புதியதாகச் சேர்ந்த 60 மாணவர்களை மத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சி.சுப்பிரமணி, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் பி.மாதேஷ், தலைமை ஆசிரியை எம்.ஆரோக்கியமேரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சங்கர் (பொறுப்பு) ஆகியோர் இனிப்புகள் வழங்கி, மலர்களைக் கொடுத்து வரவேற்றனர்.
பள்ளியின் உதவி ஆசிரியர்கள் கோமளாதேவி, கல்பனா, ஜோதிலட்சுமி, கலைச்செல்வி, உருது ஆசிரியர் ஜியவுல்லா, சிவகாமி, சத்துணவுப் பணியாளர் அக்பர் ஆகியோர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement