Ad Code

Responsive Advertisement

அரசுப் பள்ளியில் படித்த மாணவிக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம்

அரசுப் பள்ளியில் படித்த மாணவி கனிமொழிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்துள்ளது. வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மகள் கனிமொழி. ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.

இவர் காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள ஆற்காடு நாராயண முதலியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, 1,142 மதிப்பெண்கள் பெற்றார். இவரது எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் 194.5.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் கனிமொழி புதன்கிழமை கலந்து கொண்டார். அப்போது மாணவிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் குமரேசன் கூறியது: மாணவி பள்ளிக்கு பெருமையைத் தேடி தந்துள்ளார். இவரை முன்மாதிரியாகக் கொண்டு நடப்புக் கல்வியாண்டில் மாணவிகளை நல்ல மதிப்பெண்கள் பெற நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement