பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த, கிராமப்புற மாணவிக்கு மருத்துவப் படிப்பிற்கான (எம்பிபிஎஸ்) இடம் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். கூலித் தொழிலாளி. இவரது மகள் கனிமொழி (17). பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து கடந்த ஆண்டு (2014-15) பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினார். இவர், 1142 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதலிடத்தை பிடித்தார்.
மாணவி கனிமொழி மருத்துவ படிப்பிற்கு (எம்பிபிஎஸ்.) விண்ணப்பித்திருந்தார். அவருக்கு தரவரிசை பட்டியலில் 147வது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியில், இலவசமாக எம்.பி.பி.எஸ். படிக்க இவர் தயாராக உள்ளார். கிராமப்புறத்தில் உள்ள ஏழை குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து, மருத்துவப் படிப்பு படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி கனிமொழியை, மாவட்ட கல்வி அலுவலர் நூர்முகமது, தலைமை ஆசிரியர் குமரேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி துவங்கி 142 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த பள்ளியில் படித்த மாணவி கனிமொழி முதல்முறையாக மருத்துவப் படிப்பு படிக்க தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை