அவதுாறு மற்றும் பீதியைப் பரப்பும், 'வாட்ஸ் ஆப்' பதிவுகளை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
இதுகுறித்து, சைபர் கிரைம் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாட்ஸ் ஆப் பதிவுகள், ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து, மற்றொரு எண்ணிற்கு செல்லும் போது, தொலைபேசி எண்ணிற்கு உரியவர்களை, பொறுப்பாக்க முடியும். இதுபோன்ற புகார்கள் மீது, நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.இரு தொலைபேசி எண்களுக்கு இடையே நடக்கும் வாட்ஸ் ஆப் உரையாடல், தொலைபேசி உரையாடல் போலத் தான் கருதப்படும். ஆனால், 'குரூப்' மூலம் பரப்பப்படும் பதிவுகள், எங்கிருந்து துவங்கியது என்பதை கண்டுபிடிப்பது, சற்று கடினமாக உள்ளது.குரூப் பதிவின் மூலத்தை, வாட்ஸ் ஆப் சர்வரில் இருந்தே பெற முடியும். வாட்ஸ் ஆப் சேவை, 'பேஸ்புக்' நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இதன் அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது.எனவே, வாட்ஸ் ஆப் பதிவின் மூலத்தைப் பெற, பேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி உள்ளோம். அது கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு, குரூப் பதிவு குறித்து, வரும் புகார்களை பதிவு செய்து, விசாரணை மட்டும் நடத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
வெளிநாடுகளில் எப்படி?
அவதுாறு பரப்பும் வாட்ஸ் ஆப் பதிவுகளை செய்வோருக்கு, சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க, அரபு நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. சில நாடுகள், வாட்ஸ் ஆப் பயன்படுத்த தடை விதித்துள்ளன.இணையதளங்களில், அவதுாறு மற்றும் பீதியை கிளப்புவோர் மீது, 'சைபர் கிரைம்' சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஆனால், தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் , 'வாட்ஸ் ஆப் பதிவுகள் குறித்து, சைபர் கிரைம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை