கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகள் மற்றும் திறக்கப்படாத மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., பள்ளிகள், கோடை விடுமுறைக்குப் பின், இன்று திறக்கப்படுகின்றன. கே.வி., பள்ளிகளில் இன்று முதல், தினமும் யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்படஉள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மார்ச்சில், ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து, ஏப்ரலில் புதிய கல்வியாண்டு துவங்கும். பின், பள்ளிகளின் விருப்பம் போல், 40 - 50 நாட்கள் வரை மே, ஜூனில் கோடை விடுமுறை அறிவிக்கப்படும்.
கேந்திரிய வித்யாலயா எனப்படும் மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், கோடை விடுமுறைக்குப் பின், இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில், 43 கே.வி., பள்ளிகள் உள்ளன.
கே.வி., பள்ளிகளில் தினமும் காலையில், பிரார்த்தனை நேரத்தில் யோகா பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை