ஓசூர் – தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் 18–ந் தேதி காலை நடந்த கணிதத்தேர்வின் போது தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன் மற்றும் கோவிந்தன் ஆகியோர் தங்களது மொபைல் போன் மூலம் கணித வினாத்தாளை புகைப்படம் எடுத்து அதனை ‘வாட்ஸ் அப்’ மூலம் சக ஆசிரியர்கள் சிலருக்கு அனுப்பினர்.
இவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்து உள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஓசூர் டி.இ.ஓ. வேதகன் தன்ராஜ் கிருஷ்ணகிரி டி.இ.ஓ. அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், புக்க சாகரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாது, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலக இளநிலை உதவியாளர் ரமணா உள்பட 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதனால் இவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. இதையடுத்து ஓசூர் டி.இ.ஓ. வேதகன் தன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் மாது ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் டி.இ.ஓ. வேதகன் தன்ராஜிற்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கியது. ஆசிரியர் மாதுவிற்கு முன்ஜாமின் வழங்கப்படவில்லை. இதனால் அவர் தலை மறைவானார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த ஆசிரியர் மாதுவை நேற்று கைது செய்து விசாரணைக்காக கிருஷ்ணகிரி அழைத்து சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க மாதுவை போலீசார் அழைத்து சென்ற போது அவருக்கு திடீரென உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை