Ad Code

Responsive Advertisement

ஐ.ஐ.டி.,க்கு எதில் படிக்க ஆர்வம்? : நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

இந்திய தொழில்கல்வி நிறுவனம் என அழைக்கப்படும், ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில், மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்ய, நாளை முதல், ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்; கவுன்சிலிங், ஜூலை, 1ல் துவங்குகிறது.

உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.ஐ.டி., ஆகியவற்றில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, 451 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்; நாளை முதல், கவுன்சிலிங் நடவடிக்கை துவங்குகிறது. கடந்த ஆண்டு வரை மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சி.எஸ்.ஏ.பி., என்ற, மத்திய இட வழங்கல் வாரியம் நடத்தியது.

இந்த ஆண்டு முதல், மத்திய அரசின், இணைந்த இட வழங்கல் ஆணையமான, 'ஜே.ஓ.எஸ்.ஏ.ஏ., - ஜாய்ன்ட் சீட் அலொக்கேஷன் அதாரிட்டி' நடத்துகிறது. கவுன்சிலிங் நடக்கும் தேதிகளை, இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:

* மாணவர் தங்கள் பாடப்பிரிவு மற்றும் கல்வி நிறுவனம் எது என்பதை, நாளை முதல், 29ம் தேதிக்குள், ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும்.

* ஜூலை, 1ல் முதற்கட்ட கவுன்சிலிங் துவங்கும்.

* இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூலை, 7ல் நடக்கும்.

* ஜூலை, 16ம் தேதி முதல், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி.,யில் புதிய கல்வியாண்டு துவங்கும். ஐ.ஐ.டி.யில் ஜூலை, 17 முதல்; ஐ.ஐ.ஐ.டி.,யில் ஜூலை, 23 முதல் வகுப்புகள் துவங்கும்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


ஐ.ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, 451 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement