Ad Code

Responsive Advertisement

பாரதியார் பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: மறு மதிப்பீடுக்கு 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதையடுத்து, மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு ஜூன் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 பாரதியார் பல்கலைக்கழகம், அதன் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஏப்ரல்-மே பருவத்துக்கான பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்புகளின் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மாணவர்கள்  தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ் பிச்சை தெரிவித்துள்ளார்.

 அதேபோல், சிறப்புத் துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடத்தப்படும் எனவும், இதற்குத் தகுதியுள்ள மாணவர்கள் ஜூலை 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சி.ஆர்.கிளாடிஸ் லீமாரோஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement