தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் வேறுபாடு இல்லாத நிலை உருவாகியுள்ளது என்று சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா கூறினார்.
பயிற்சி முடித்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசை வழங்கி சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நான் அரசுப் பள்ளியில் செங்கல் தரையில் அமர்ந்துதான் படித்தேன். எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வரை தாய் மொழியான ஹிந்தியில் படித்தேன். பின்னர் ஆங்கிலத்தில் கல்லூரியில் படித்தேன். தற்போது உதவி ஆட்சியராக பொறுப்பேற்று தமிழ் படித்துக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் படிப்பும், மொழி அறிவும் தொடர்ச்சியாக வாழ்க்கை முழுவதும் நடைபெற வேண்டும்.மாணவர்கள் முக்கியமான மூன்று காரியத்தை மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்.
பயிற்சி, பயிற்சி, பயிற்சி. இதற்கு மாற்றே கிடையாது. தற்போது இங்கு தரப்பட்டுள்ள பயிற்சியை வீட்டில் போய் தொடர்ச்சியாக மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர்.
தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் பேசுகையில்:
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது. இது தற்போது வெளிவந்துள்ள அரசுப் பொதுத் தேர்வில் வெளிப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி, அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் பரிந்துரை தேவைப்படும் அளவிற்கு கூடுதலாக மாணவர்கள் வாழ்க்கைக்கு பயனுள்ள திறமைகளை பள்ளியில் வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்திய இப் பள்ளி ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜைப் பாராட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு அரிமா சங்கம் சார்பில், சாதனையாளர் மற்றும் நல்லாசிரியர் விருது-2015 வழங்கி, பட்டயத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம் வாழ்த்துரை வழங்கினார். விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத் தலைவர் ஆ.காமராஜ், ஆசிரியை ச.பொன்மலர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை