இந்த கல்வி ஆண்டு முதல் 2 ஆண்டு பிஎட் படிப்பை அமல்படுத்தாத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட பி.எட். கல்லூரிகள் உள்ளன. இதில் ஓராண்டு பி.எட், எம்.எட், படிப்புகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நாடு முழுவதும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை என்.சி.டி.இ 2014ல் வெளியிட்டது. அதில் பி.எட், எம்.எட், படிப்பு காலம், 2015-16ம் கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகளாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புதிய விதிகளின் படி பி.எட், படிப்பில், தகவல் தொழில்நுட்ப கல்வி, யோகா, பாலின கல்வி, மாற்றுத்திறன் ஒருங்கிணைப்பு கல்வி போன்றவை கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. அதேபோல் பி.எட், பட்டப்படிப்பு தியரி, ப்ராக்டிக்கல் மற்றும் நேரடி களப்பயிற்சி என பிரிக்கப்பட்டுள்ளன.
இப்பாடத் திட்டத்துக்கு ஏற்ப புதிய கட்டிடங்கள், ஆய்வகம், ஓராண்டுக்கான கூடுதல் வகுப்பறைகள், புதிய பாடத்துக்கான கூடுதல் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை கல்லூரிகள் செய்ய வேண்டும். ஆனால் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தனியார் பி.எட், கல்லூரிகள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அனைத்து பி.எட், எம்.எட், கல்லூரிகளுக்கு, என்.சி.டி.இ சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் புதிய விதிமுறைப்படி, 2015-16ம் கல்வியாண்டில் பி.எட், எம்.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாகும். மேலும் மாணவர்கள் எண்ணிக்கையை நிபந்தனைக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால், கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2 ஆண்டு பி.எட் மற்றும் எம்.எட் படிப்புக்கான பாடத்திட்டத்தை, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை தயாரித்து, அரசின் அனுமதிக்கு அனுப்பியுள்ளது.
ஆனால் அரசின் சார்பில் புதிய பாடத்திட்டத்துக்கு அனுமதி வழங்கவோ, வழக்கை முடிவுக்கு கொண்டு வரவோ நடவடிக்கை எடுக்காததால், வரும் ஜூன் முதல் மாணவர் சேர்க்கை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை