சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகளுக்கான மாதாந்திர உதவி பெறுவதற்காக, விதிமுறைகளை, தமிழக அரசு தளர்த்தி உள்ளது. வருமான வரம்பு, 5,000 ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தாலும் பயன் பெறலாம். வாரிசுகள் இருந்தாலும், ஆதரவில்லை என்றால், தாராளமாக முதியோர் உதவி கிடைக்கும்.
உதவித்தொகை:
அரசாணை:
சட்டசபைத் தேர்தலில், இது சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால், மாதாந்திர உதவிக்கான விதிமுறைகளை, தமிழக அரசு தளர்த்தி உள்ளது.
* வருமான வரம்பு, 5,000 ரூபாய்க்குள் என்று இருந்ததை, 50 ஆயிரம் ரூபாய்க்குள் என, 10 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தாலும் பயன்பெறலாம்.
* வாரிசுகள் இருந்தாலும், அவர்களால் பயனில்லை என்றால், மாதாந்திர உதவி பெற, முதியோர் தகுதி பெறுவர்.
* எல்லா விதமான உதவித்தொகை திட்டத்திலும், 'ஆதரவற்றோர்' என்ற பிரிவு கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளது.
* மாற்றுத்திறனாளிகளுக்கான விதிமுறைகளில், 'வேலை செய்ய முடியாத தன்மை' என்ற பிரிவு நீக்கப்பட்டு உள்ளது. 60 சதவீத பாதிப்பு உள்ள, அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும்.
* உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்டோர் மாதாந்திர உதவி பெற, 'மகன், மகள் ஆதரவு இல்லாமல் இருந்தால்...' என்ற விதிமுறையும் நீக்கப்பட்டு உள்ளது. இதற்கான, அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வருவாய்த் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆண்டு வருவாய், 5,000 ரூபாய் என்பது, 20 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. காலத்திற்கேற்ப, 50 ஆயிரம் ரூபாய் என, அரசு திருத்தம் செய்துள்ளது. உண்மையில், பாதிக்கப்பட்டுள்ளோர் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதனால், கிராமப்புறங்களில் உள்ள, குடிசைவாசிகள் பயன்பெறுவர். பயனாளிகள் எண்ணிக்கை, ஐந்து லட்சம் வரை கூட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
நிதிச்சுமையை சமாளிக்க முடியுமா?
தமிழக அரசுக்கு, கடந்த நிதியாண்டில், வரி வகையிலான வருவாய் மட்டும், 91,835 கோடி ரூபாய் இருக்கும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. வணிகவரி, பத்திரப்பதிவு உள்ளிட்ட வரி வருவாய், இலக்கை எட்ட முடியாத அளவில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், இலக்கை, அரசு, 85,772 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டது. பொங்கல் பரிசு தர முடியாத அளவில் நெருக்கடி ஏற்பட்டது. இந்த சூழலில், சமூக பாதுகாப்பு திட்ட விதிமுறைகளில் தளர்வால், மேலும் நிதிச்சுமை ஏற்படும். இதை, எப்படி அரசு சமாளிக்கும் என, தெரியவில்லை.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை