ஆணயர்(கா.ப) ந.க. எண் :82801/எம்.3/2004-2. தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதி:1973, சார்விதி:2. அசையும் சொத்து -----------------------------(1) ரூபாய் 15000/ க்கு மேல் அசையும் சொத்து வாங்கினாலோ, விற்பனை செய்தாலோ, நிர்னயிக்கப்பட்ட அதிகாரிக்கு (controling officer )
ஒருமாதத்திற்குள் உரிய நிதி ஆதாரம், சொத்து விபரங்களுடன் தெரிவித்தால் போதுமானது .
அசையா சொத்து. -------------------------- (1) காலி வீட்டுமனை அல்லது கட்டப்பட்ட வீடு வாங்கும் போது அதன் விலைமதிப்பை. (guiding value) அரசு பதிவுத்துறையிடமிருந்து பெற்று அனுப்பி வைக்க வேண்டும். (2) கட்டிடம் கட்ட உரிய அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். (3)கட்டிட மதிப்பு, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் இணைக்கப்பட வேண்டும். (4)சொத்தோ அல்லது கட்டப்பட்ட வீடோ வாங்கப்படும் நேர்வில் உரிய பனம் ஆதாரம் (source of income ) அவசியம் இணைக்கப்பட வேண்டும். (5) வங்கி கடன் எனில் அதற்கான சான்று, ஒப்புதல் கடிதம், தவணைத் தொகை , தவணை மாதம, ஊதியத்தில் கையில் எடுத்துச் செல்லும் தொகை குறிப்பிடப்பட வேண்டும். (6) நபரின் ஊதியச்சான்று. (7)உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். குறிப்பு. ----------- அரசாணை எண் :409, P& AR 24/12/92 ன்படி அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினரால், குடும்ப உறுப்பினரின் தொகை மூலம் வாங்கப்படும் சொத்திற்கு முன் அனுமதி தேவை இல்லை. கவனத்திற்கு. --------------------' துறை ரீதியான கடன் பெற (department loan) பெற கட்டாயம் மேற்கண்ட துறை அனுமதி பெற வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை