தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 676 டேப்-டெக்னீஷியன் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் எஸ்.மணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மருத்துவத் துறையில் காலியாக உள்ள 676 லேப்-டெக்னீஷியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, ஏதாவது ஒரு நிறுவனத்தில், மருத்துவ ஆய்வக உதவியாளர் சான்று (சிஎம்எல்டி) பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு, 1-7-2015 அன்றைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 35 வயதும், பி.சி., எம்.பி.சி, பி.சி.எம்.,பிரிவினருக்கு 32 வயதும், ஓ.சி. பிரிவினருக்கு 30 வயதும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப் பணிக்கு, மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, கல்வி நிறுவனங்களின் பட்டியலும், வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்களில் படித்து, சான்று பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின், பதிவு மூப்பு பட்டியல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் பெயர் விடுபட்டிருந்தால், வரும் 30-ம் தேதிக்குள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை