காந்திகிராமம்:காந்திகிராம பல்கலையில் 2015--16 கல்வியாண்டிற்கு 'ஆன்-லைனில்' விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தமுறையை பல்கலையில் துணைவேந்தர் நடராஜன் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை ஒருசில மத்திய பல்கலைகளில் மட்டுமே உள்ளது. தற்போது காந்திகிராம பல்கலையில் அறிமுகம் செய்யப்படுகிறது. அனைத்து பாடங்களுக்கும் 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் தீதீதீ.ணூதணூச்டூதணடிதி.ச்ஞி.டிண என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.நேரில் வருவோர் விண்ணப்பிக்க பல்கலை கம்ப்யூட்டர் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.ஏ.,- எம்.எட்., போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 'ஆன்-லைன்' மூலம் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் அலைச்சல், பண விரையம் தவிர்க்கப்படும். கூடுதல் தகவல் பெற விரும்புவோர் 0451 -2452372 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார். பதிவாளர் பாலசுப்ரமணியன் உடனிருந்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை