பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா ஏப்ரல் 1-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். பார்வையற்றோரை ஆசிரியர் பணியிடங்களில் 2009-ல் நியமிக்காததை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
பார்வையற்றோரை குறிப்பிட்ட காலிப்பணியிடங்களில் நியமிக்க முடியாது என அரசு பதில் அளித்துள்ளது. பார்வையற்றோரையும் சாதாரண மனிதர்களாக பார்க்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பார்வையற்றோரை நியமிக்காதது ஏன்? - இது குறித்து செயலாளர் சபீதா விளக்கம் அளிக்க ஐகோ£ட் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி சபீதா நேரில் ஆஜராகவும் ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை