Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,விருதுநகர் மாவட்டக் கிளையின் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் திரு.இயே.அன்புச்செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு வந்திருந்தோரை மாவட்டச் செயலாளர் கொ.கனகராஜ் அவர்கள் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் திரு.இரா.இலட்சுமணன் அவர்கள் கலந்துகொண்டு இயக்க நிகழ்வுகளை விளக்கிக் கூறினார்.இயக்க உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல்,சிவகாசி வட்டாரப் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ரெ.சுப்புராஜ், சிவகாசி,சாத்தூர்,வெம்பக்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்ட முடிவில் மாவட்டப் பொருளாளர் அழகர்சாமி அவர்கள் நன்றி கூறினார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement