பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) மூலம் வெளியிட்ட விவகாரத்தில், ஒரே நாளில் 7 ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்கு வராதது ஏன் என்பது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தத் தேர்வு மையத்தில் தேர்வுப் பணிக்கு வர வேண்டிய 7 ஆசிரியர்கள் ஒரே நாளில் பணிக்கு வராததாலேயே கூடுதல் ஆசிரியர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கூடுதல் ஆசிரியர்களில் ஒருவர்தான் பிளஸ் 2 கணித வினாத்தாளை படம் எடுத்து கட்செவி அஞ்சல் மூலம் வெளியில் அனுப்பியுள்ளார்.
வழக்கமாக, தேர்வுப் பணிகளுக்கு ஓரிரு ஆசிரியர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் பணிக்கு வராமலிருப்பது வழக்கமானதுதான். ஆனால், ஒரே நாளில் 7 ஆசிரியர்கள் பணிக்கு வராமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் இது தொடர்பாகவும் கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பிளஸ் 2 கணிதத் தேர்வில் தேர்வறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் கட்செவி அஞ்சல் மூலம் வினாத்தாளை சக ஆசிரியர்களான கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 4 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை