Ad Code

Responsive Advertisement

குரூப் - 2 பதவி நியமன 1:5 விகிதாசாரம் குழப்பம்: டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்

குரூப் - 2 தேர்வில் நடந்து வரும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான குழப்பத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தெளிவுபடுத்தி உள்ளது. குரூப் - 2 தேர்வில், வழக்கத்திற்கு மாறாக, 1:5 என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டதால், எந்த அடிப்படையில் இறுதித் தேர்வு நடக்கும் என்று, 5,635 தேர்வாளர்களும் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் வெளியிட்ட அறிவிப்பு:

தேர்வாணையத்தால், 2013, 2014ம் ஆண்டுகளுக்கான குரூப் - 2 தேர்வில், நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு நவம்பர் 8, 9ம் தேதிகளில் நடந்தன. இதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீடு, காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தில், ஒரு காலிப் பணியிடத்திற்கு, ஐந்து விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச் 26 முதல் மே 8 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இதன் பின், விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீடு, காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில், 1:2 (ஒரு பதவிக்கு இருவர்) என்ற விகிதத்தில், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement