தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம்,இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு 28 லட்சம் இலவச வாடிக்கையாளர் உட்பட மொத்தம் 1.53 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு திட்டம் கடந்த தி.மு.க., ஆட்சியில் 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. இவர்களுக்கு மானிய விலையில், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்பட்டது.ஆனால் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கூடுதல் சிலிண்டர் போன்ற சலுகைகளை பெற முடியாது.
அதற்கும், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில், விண்ணப்பிக்க வேண்டும் என பல்வேறு நடைமுறை இருந்ததால், அவர்கள் மாற்ற முடியாமல் தவித்தனர்.இதையடுத்து இலவச காஸ் இணைப்பு வாடிக்கையாளருக்கு, மற்ற வாடிக்கையாளர்கள் போல் ஆண்டுக்கு 12 சிலிண்டர் வழங்க, தமிழக உணவு வழங்கல் துறை, எண்ணெய் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.எண்ணெய் நிறுவனங்கள், ஏஜன்சிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், இலவச இணைப்பு தாரர்களுக்கும் 12 சிலிண்டர் வழங்கலாம். இரண்டாவது சிலிண்டர் பெற விரும்புவோர் அதற்கான டிபாசிட் தொகை செலுத்தி பெற்று கொள்ளலாம். பெயர் மாற்றம் போன்ற நடைமுறைகள், மற்றவர்களுக்கு போல காஸ் ஏஜன்சிகளே மேற்கொள்ளலாம். ஆனால், குடும்ப உறுப்பினர் தவிர்த்து மூன்றாம் நபருக்கு மாறுதல் செய்யக்கூடாது, என அறிவுறுத்தியுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை