கடற்கரை வழியாக நாகர்கோவிலுக்கு இணைப்பு வசதி செய்து தரப்படும்.
பட்ஜெட் அளவு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
970 தரைப்பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும்.
லெவல் கிராஸிங் பாதுகாப்புக்கு 6,581 கோடி ரூபாய் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.
மிகவும் பின் தங்கிய, தொலை தூரங்களுக்கு ரயில் இணைப்பு வழங்க திட்டம்
ரயில் பெட்டிகளில் தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவி பொருத்தப்படும்.
மாநிலங்களுடன் இணைந்து கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரயில்சேவை துவங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும்
தேர்வு செய்யப்பட்ட 4 பல்கலைக்கழகங்களில் ரயில்வே ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும்.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரயில் விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காகிதம் இல்லா பயணச் சீட்டுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதியோர் ஊனமுற்றோருக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க முன்னுரிமை
3,400 ஆளில்லா லெவல் கிராஸிங் முற்றிலும், ஒழிக்கப்படும்.
ரயில் நிலையத்திற்குள் நுழைந்த 5 நிமிடத்திற்குள் டிக்கெட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
9 வழித்தடங்களில் ரயில்களின் வேகம் 160 கி.மீட்டராக அதிகரிக்கப்படும்.
மெட்ரோ ரயில் வசதி 160 கிமீட்டர் முதல் 200 கிலோ மீட்டர் வரை விரிவுப்படுத்தப்படும்.
வரும் நிதியாண்டில் 6000 கி.மீ பாதைகள் மின் மயமாக்கப்படும்
சிறப்பான விளக்கு வசதிகளுடன் ரயில் பெட்டிகளின் உள்கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்படும்
மாநிலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலையங்கள் மாற்றியமைகப்படும்.
இரட்டை பாதை, மின்மயமாக்கல் உள்ளிட்ட 77 புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
9,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்படும்.
முக்கிய ரயில்களின் படுக்கை வசதி எண்ணிக்கை உயரும்
புறநகர் பயணிகளுக்காக ஸ்டர்டிலைட் முனையம் ஏற்படுத்தப்படும்
சாமானியரோடு தொடர்பு கொள்ள எம்.பி. தலைமையில் குழு ஏற்படுத்தப்படும்.
முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது
மூத்த பயணிகள், கர்ப்பிணிகள், ஆகியோருக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க வகை செய்யப்படும்.
அடுத்த 2 ஆண்டுகளில் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படும்
பயண நேரத்தை 20 சதவீதம் குறைக்க ரயில்வே துறை முடிவு எடுத்துள்ளது.
முக்கிய ரயில் நிலையங்களில் இலவச wifi வசதி செய்து தரப்படும்
கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்.
ரயில் பெட்டிகளில் சி.சி.டி.வி. காமிரா பொறுத்த ஏற்பாடு செய்யப்படும்.
ரயில் நேரம் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் பயணிகளுக்கு அறிவிக்க வசதி.
தொலை பேசி மூலமும் ஸ்மார்ட் போன் மூலமும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டம்
109 ரயில்களில் மின்னணு முறையில் உணவு வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
மார்ச் 1ம் தேதி முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்படும்
எஸ்.எம்.எஸ் மூலம் குறைகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும்
24 மணி நேரமும் செயல்படும் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும் இதற்கான உதவி எண் 138.
650 ரயில் நிலையங்களில் புதிய கழிப்பறைகள் கட்டப்படும். 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைக்கப்படும்.
ரயில் நிலையங்களில் தூயமைக்கென தனித்துறை அமைக்கப்படும்
முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய 11 அம்சங்கள் பின்பற்றப்படும்
எதிர்பார்த்ததை விட நிதி அதிகரித்துள்ளது.
ரயில்வே துறையில் 8.5 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாது.
நிதித்தேவையில் தன்னிறைவு பெற்றதாக ரயில்வே துறை மாற்றம் பெறும்
அடுத்த 5 ஆண்டுகளில் 4 அம்ச இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
உள் கட்டமைப்பை நவீனமயமாக்குவது பாதுகாப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தூய்மை இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு ரயில்வேயில் முன்னுரிமை கொடுக்கப்படும்
ரயில்வே தரத்தை மேம்படுத்த 20 ஆயிரம் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
பாதுகாப்பான பயணத்துக்கு ரயில்வே உறுதியளிக்கும்
சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
ரயில்வே பாதைகள் அவற்றின் திறனையும் தாண்டி பயன்படுத்தப் படுகின்றன
ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்
ரயில்வேயில் அதிக முதலீட்டால் வேலை வாய்ப்பு பெருகும்
இந்திய பொருளாதாரத்தில் ரயில்வே துறை முக்கியப் பங்காற்றுகிறது: சுரேஷ்பிரபு
ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் சுரேஷ் பிரபு உரையாற்றுகிறார்
எதிர்கட்சிகள் குறித்து கூறிய கருத்துக்கு வெங்கைய நாயுடு நாடாளுமன்றத்தில் விளக்கம்
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பகல் 11.30மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் படியே ரயில்வே துறையில் வளர்ச்சி திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: சுரேஷ் பிரபு
ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளு மன்றத்துகு புறப்படார் அமைச்சர் சுரேஷ் பிரபு
ரயில்வே பட்ஜெட் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்: அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
ரயில்வே பட்ஜெட் இன்று பகல் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சாதாரண மனிதர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக ரயில்வே பட்ஜெட் இருக்கும்: மனோஜ் சின்ஹா
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு புத்துயிர் அளிக்கப்படுமா? புதிய ரயில்கள் கிடைக்குமா.
கிடப்பில் போடப்பட்ட 100 ஆண்டு கோரிக்கை
கைவிடப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள்
பாதியில் கைவிடப்பட்ட ரயில் பாதை திட்டங்கள்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை