Ad Code

Responsive Advertisement

நேரடி நியமன உதவியாளருக்கு பதவி உயர்வு: ஊழியர்கள் கோரிக்கையை ஏற்ற அரசு

வருவாய்த்துறையில் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெறும் விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெற்றிருந்தால் மட்டும் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுவர். இத்தேர்வு மூலம் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதால், 5 ஆண்டுகளில் கலெக்டர் அலுவலக பயிற்சி முடிக்க இயலாத நிலையுள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த ஊழியர்கள் துறை தேர்வுகளில் பயிற்சி பெற்று, மூன்றாண்டுகள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் இரண்டாண்டு வருவாய் ஆய்வாளர் பணி முடித்திருப்பின் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு தகுதியானவராக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். நேரடி நியமன உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்பதற்கு பதில், வருவாய் கட்டுப்பாட்டிலுள்ள ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளர் நிலையில் பணிபுரிய அமைச்சு பணி விதியில் திருத்தம் செய்யலாம் என வருவாய் நிர்வாக கமிஷனரும் சிபாரிசு செய்தார். அதை ஏற்று அமைச்சு பணி விதிகளில் திருத்தம்(அரசாணை எண்: 93, 20.2.15) செய்து அரசு செயலாளர் வெங்கடேசன் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement