தமிழகத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த சேவையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி நேற்று தொடங்கிவைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள அரிய தமிழ் நூல்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்த நூல்களின் பக்கங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் இலவசமாக திறந்து படிக்கலாம். இந்த மின் நூல்களை பூச்சிகளாலும், தீயாலும் அழிக்க முடியாது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புதுப்பாளையம் கிராமத்தில் சமரச சன்மார்க நூலகத்தில் தமிழ்க் காப்பு ஆர்வலர்களால் கடந்த 100 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த அரிய தமிழ் நூல்களான சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி பதவுரை, ஜெயமுனி சூத்திரம், அமிர்தம் பிள்ளையின் யாப்பிலக்கண விளக்கம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட 19-ம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்ட நூல்களை கண்டுபிடித்திருக்கிறோம். அவற்றை டிஜிட்டல் முறையில் மாற்றி, இணையத்தில் பதிவேற்றியிருக்கிறோம். இப்பணிக்காக அரசு ரூ.10 லட்சம் ஒதுக்கியுள்ளது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மேலும் பல அரிய நூல்களை டிஜிட்டல் முறையில் மாற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் வீரமணி பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மூ.ராசாராம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மூ. ராசாராம் பேசியதாவது: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வரலாற்றில் இது ஒரு பொன்னான நாள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நூற்றாண்டு கால அரிய நூல்களைத் தேடி கண்டுபிடித்து, அவற்றை டிஜிட்டல் முறைக்கு மாற்றி, இணையதளங்களில் பதிவேற்றம் செய்திருப்பது தமிழ் வளர்ச்சியில் ஒரு மைல்கல். வருங்கால மற்றும் நிகழ்கால ஆய்வறிஞர்கள் ஊரெல்லாம் தேடிக் கண்டுபிடித்து ஆய்வு நிகழ்த்துவதைவிட உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நூல்களை பார்த்தால், படித்தால் மட்டுமே போதும். பழங்கால தமிழிலக்கிய செல்வங்களை இணையதளத்தின் வழியாக உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து சேர்த்த பெருமை தமிழக அரசை சேரும். இவ்வாறு ராசாராம் பேசினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை