ஐ.எப்.எஸ்., எனும் இந்திய வனப்பணி தேர்வில், சேலம் மாணவி பிரீத்தா, அகில இந்திய அளவில் எட்டாமிடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., சார்பில், இந்திய வனப்பணியான, ஐ.எப்.எஸ்., முதல்நிலைத் தேர்வு, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நடந்தது. நவம்பர் மாதம் முதன்மை தேர்வும், கடந்த பிப்ரவரி மாதம், நேர்காணலும் நடந்தன.
இறுதி தேர்வு முடிவு, கடந்த, 18ம் தேதி வெளியானது. இதில், அகில இந்திய அளவில், 85 பேரும், தமிழக அளவில், 15 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவற்றில், சேலத்தைச் சேர்ந்த பிரீத்தா என்ற மாணவி, இந்திய அளவில் எட்டாம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். சேலம், அழகாபுரம், பி.என்.டி., காலனியைச் சேர்ந்த பிரீத்தாவின் தந்தை முருகேசன், ஊட்டியில் ஆவின் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். தாய் நர்மதா, சேலம் மாவட்டம், ஓமலூர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். பிரீத்தாவின் சகோதரர் ரேவந்த், கோவையில், தனியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
வனப்பணி தேர்வில் சாதனை படைத்தது குறித்து, பிரீத்தா கூறியதாவது:
நான், கோவை பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரியில், பி.டெக்., (ஐ.டி.) படித்தேன். 2012ல், படிப்பை முடித்ததும், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வந்தேன். சென்னை, அண்ணா நகரில் உள்ள தனியார் அகாடமியில் பயிற்சி பெற்றேன். 2013ல் நடந்த சிவில் சர்வீஸ் போட்டி தேர்வில், முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றேன். முதன்மை தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக முயற்சித்து, இந்திய அளவில், எட்டாமிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற, கடுமையாக உழைக்க வேண்டும்; படிக்கும்போது கவனம் சிதறக் கூடாது; மனதை ஒருமுகப்படுத்திப் படிக்க வேண்டும். இந்திய வனப்பணியில், துடிப்புடனும், நேர்மையாகவும் திறம்பட பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை