Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் போது செய்யக்கூடியவை என்ன? , செய்யக் கூடாதவை என்னென்ன? - தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை தேர்வுத்துறை  தெளிவுபடுத்தியுள்ளது. 

செய்யக்கூடியவை என்ன?

* விடைத்தாளின் முகப்பு சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.
* விடைத்தாளில் ஒரு பக்கத்தில் 20 முதல் 25 வரிகள் வரை எழுத வேண்டும்.
* விடைத்தாளின் இரு புறத்திலும் எழுத வேண்டும். 
* முறைகள் எல்லாம் விடைத்தாளின் பகுதியில் இடம்பெற வேண்டும். 
* கேள்வியின் எண் தவறாமல் எழுத வேண்டும்.
* இரு விடைகளுக்கு இடையே இடைவெளி விட்டு எழுத வேண்டும். 
*  வினாத்தாளின் வரிசை (ஏ அல்லது பி) மதிப்பெண்களுக்கான பக்கத்தில் குறிப்பிட வேண்டும். 
* விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மை பேனாக் களால் விடைகளை தெளிவாக எழுத வேண்டும். 
* விடைத்தாளில் எதுவும் எழுதாத பக்கங்களில் குறுக்கு கோடு இட வேண்டும்.

செய்யக் கூடாதவை என்னென்ன? 

* வினாத்தாளில் எந்தவித குறியீடும் இடக்கூடாது.
* விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது.
* விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் தேர்வு எண் அல்லது பெயர் எழுதக் கூடாது.
* கலர் பேனா, பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது. 
* விடைத்தாளில் உள்ள (மார்ஜின்) கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது. 
* விடைத்தாள் புத்தகத்தின் எந்த தாளையும் கிழிக்கவோ அல்லது நீக்கவோ கூடாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement