பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை தேர்வுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
செய்யக்கூடியவை என்ன?
* விடைத்தாளின் முகப்பு சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.
* விடைத்தாளின் இரு புறத்திலும் எழுத வேண்டும்.
* முறைகள் எல்லாம் விடைத்தாளின் பகுதியில் இடம்பெற வேண்டும்.
* கேள்வியின் எண் தவறாமல் எழுத வேண்டும்.
* இரு விடைகளுக்கு இடையே இடைவெளி விட்டு எழுத வேண்டும்.
* வினாத்தாளின் வரிசை (ஏ அல்லது பி) மதிப்பெண்களுக்கான பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
* விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மை பேனாக் களால் விடைகளை தெளிவாக எழுத வேண்டும்.
* விடைத்தாளில் எதுவும் எழுதாத பக்கங்களில் குறுக்கு கோடு இட வேண்டும்.
செய்யக் கூடாதவை என்னென்ன?
* வினாத்தாளில் எந்தவித குறியீடும் இடக்கூடாது.
* விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது.
* விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் தேர்வு எண் அல்லது பெயர் எழுதக் கூடாது.
* கலர் பேனா, பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது.
* விடைத்தாளில் உள்ள (மார்ஜின்) கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது.
* விடைத்தாள் புத்தகத்தின் எந்த தாளையும் கிழிக்கவோ அல்லது நீக்கவோ கூடாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை