Ad Code

Responsive Advertisement

122 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள்

நடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 50 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட, 122 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
நடப்பு கல்வி ஆண்டில், 50 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. மேலும், 72 உயர்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இப்பதவிகளுக்கு, பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி, தலைமை ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான கலந்தாய்வு, நாளை டி.பி.ஐ., வளாகத்திலுள்ள, ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கருத்தரங்கில் நடக்கிறது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement