பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு செவ்வாய்க்கிழமை (பிப்.24) துவங்குகிறது. நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 இல் தொடங்கி ஏப் 10ஆம் தேதி வரை நடக்கிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 459 பள்ளிகள் உள்ளன. இதில் பத்தாம் வகுப்பு தேர்வை 46 ஆயிரத்து, 153 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
இதில் முதல்கட்டமாக 15 மதிப்பெண்ணுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு அந்தந்த பள்ளியிலேயே நடத்த கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில்: பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வு பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க அந்தந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 2 தேர்வு நடைபெறும் 122 தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள், மின் வசதி உள்ளிட்டவைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் 12 மையங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2 தேர்வை 276 பள்ளிகளைச் சேர்ந்த 17 ஆயிரத்து 935 மாணவர்களும், 19 ஆயிரத்து 374 மாணவிகளும் எழுதுகின்றனர். இதில் பதற்றமான கிராமம் மற்றும் நகரில் உள்ள பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளோம் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை