Ad Code

Responsive Advertisement

TNPSC : தமிழ் வளர்ச்சித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: ஜனவரி 28-இல் நேர்காணல்

தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) காலிப் பணியிடங்களுக்கு வருகிற 28-இல் நேர்காணல் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தலைமைச் செயலகப் பணியில் தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப்பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) பதவிக்கான 16 காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 6-இல் அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பதவிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 46 விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் வருகிற 28-இல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து  விண்ணப்பதாரர்களுக்கும் இத்தகவல் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement